தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நிலைக்கு உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய இடங்களில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8,813 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 15,040 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் ஆசிரியர் குறைகளை தெரிவிக்க புதிய வழிமுறை – அமைச்சர் அறிவிப்பு
Exams Daily Mobile App Download
இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,36,38,844 ஆக உயர்ந்தது. தற்போது 1,11,252 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நேற்றை விட 6,256 குறைவு ஆகும். மேலும் கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,27,098 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.