மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – அரசின் அதிரடி நடவடிக்கை! ஊரடங்கு அமல்!
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. தற்போது தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த தடுப்பூசியின் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியது. அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது.
இதனையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்த நேரத்தில் தன்னுடைய பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த ஒரு வார கால விடுமுறையையொட்டி தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அங்கு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதனால் சாங்சி மாகாணத்தின் பென்யாங் நகரத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல ஷாங்காய் நகரில் திரையரங்குகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் மூடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் வந்துள்ள புதிய மாற்றம்.. இனி இதற்கு தடை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
அந்நாட்டின் ஹோஹோட் நகரத்தில் மட்டும் கடந்த 12 நாட்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து தொற்று பரவும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்