இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா , ஒரே நாளில் 27 பேர் பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

0
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா , ஒரே நாளில் 27 பேர் பலி - அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா , ஒரே நாளில் 27 பேர் பலி - அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா , ஒரே நாளில் 27 பேர் பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தீவிரமடையும் கொரோனா:

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியது. மேலும் இரண்டாம் அலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனாவை தடுக்கும் வகையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இதன் பலனாக தாக்கம் குறைந்து , கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நாடாக இந்தியா மாறியது. இருப்பினும் இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா உட்பட பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 6% அகவிலைப்படி (DA) உயர்வு? ஜூலை மாதத்தில் அறிவிப்பு!

  • புதிதாக 11,793 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,18,839ஆக உயர்ந்தது.
  • புதிதாக 27 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,047 ஆக உயர்ந்தது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 9486 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,27,97,092 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.57% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 96,700 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் 1,97,31,43,196 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 19,21,811 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!