மீண்டும் பள்ளி மாணவர்களிடையே பரவும் கொரோனா தொற்று – பெற்றோர்கள் அச்சம்!
தற்போது தான் இந்தியாவில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 23 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் பலியாயினர். அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு என பொது மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும், பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் படியும் எச்சரிக்கப்பட்டது.
தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் – மீண்டும் அமலுக்கு வருமா முழு ஊரடங்கு?
இந்த கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மக்கள் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், மீண்டும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று பல மடங்காக பெருகி கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் XE என்னும் புதிய வகை வைரஸும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல் 14ம் தேதி மதுபான கடைகள் மூடல் – காவல்துறை உத்தரவு!
தற்போது உத்திரபிரதேச மாநிலம், நொய்டாவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 23 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 13 மாணவர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்கள். மற்ற மாணவர்களுக்கும் தொற்று பரவி விடும் என்கிற காரணத்தினால் அந்த பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.