தமிழக – கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு – கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருவதால், தமிழக கேரளா எல்லைகளில் தமிழக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்:
தொடர்ந்து கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது நாட்டின் தொற்று பாதிப்பு பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. மேலும், பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த வாரத்திலிருந்து வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு மேலும் நீட்டித்துள்ளது. தொற்று பாதிப்பு வாரியாக மாவட்டங்கள் 4 வகையாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றி வருகின்ற போதிலும் கொரோனா அதிக வேகத்தில் பரவி வருகிறது.
சென்னையில் கண்காணிப்பு பணியில் போலீசார் குவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இதனால் மத்திய அரசு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. கோவிட் நிர்வாகத்தில் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இந்த குழு உதவும் வகையில் செயல்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.
TN Job “FB Group” Join Now
இதனால் தமிழக கேரளா எல்லையான தென்காசியின் புளியரை பகுதியில் தமிழக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இது காரணமாகவே மாநில எல்லையில் தீவிர கண்காணிப்பு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்து, அங்கிருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.