இந்தியாவில் ஒரே நாளில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று – 378 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பண்டிகை தினங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளில் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரம் எடுத்து பரவி வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக இருந்தது. நாடெங்கும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அரசு நோய்த்தடுப்பு பணியாக ஊரடங்கை விதித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுபடுத்தி தொற்று பரவலை குறைத்தது. தற்போது இந்தியாவில் கடந்த 24 மணிநேர பாதிப்பு எண்ணிக்கை 18,870 ஆக உள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,16,451 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு!
அதனை தொடர்ந்து தினந்தோறும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 378 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,47,751 ஆக அதிகரித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் நாட்டில் 54,13,332 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு – இன்றைய நிலவரம்!
மேலும் இதுவரை 87,66,63,490 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 3,29,86,180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,29,86,180 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.81% உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,82,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.