ஒரே நாளில் நாட்டில் 4000-திற்கும் அதிகமாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு – மத்திய அரசு அறிக்கை!
கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த சில நாட்களாக அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்றைய தொற்று பாதிப்பு நிலவரத்தை மத்திய அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தொற்றின் அலை நாட்டில் முதன் முறை எழுந்த போது இருந்த அதே பதற்றம் இரண்டு ஆண்டுகள் கடந்து தற்போதும் நீடித்து வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவு உயிர்பலிகளை கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ளது. தீவிர மற்றும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் விளைவினால் கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் தற்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா வைரஸின் பாதிப்பு நிலவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 4,043 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,676 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 47,379 பேர் தற்போது வரை மருத்துவமனையில் தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
பல நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரத்தால் அதிர்ச்சியில் மக்கள்!
Exams Daily Mobile App Download
நாடு முழுவதும் இதுவரை 2,16,83,24,537 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று மட்டும், 13,10,410 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பினால் இதுவரை மொத்தம் நாட்டில் 5,28,370 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 4,39,67,340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்