நாட்டில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் சற்று குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும் இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் குறித்து பார்ப்போம்.
கொரோனா பாதிப்பு
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஓரளவு கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் நேற்று 4,043 பேர் பாதிப்படைந்த நிலையில் இன்று நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4,510 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 45 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலமாக நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,72,980 ஆக உயர்ந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் .. தீபாவளி போனஸ்? – மத்திய அரசின் முடிவு!
Exams Daily Mobile App Download
இதே போல் இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46,216 ஆக குறைந்துள்ளது. மேலும் நாட்டில் கொரோனாவால் 33 பேர் இறந்துள்ளனர். அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,403 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2,16,95,51,591 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்