இந்தியாவில் கொரோனா தொற்று முடிவு நிலையை எட்டியுள்ளது – உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி!
தற்போது நாடு முழுவதும் எதிர் வரும் நாட்களில் 3ம் அலையை குறித்து அச்சத்தில் உள்ள நிலையில், 2ம் அலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.
தொற்று முடிவு நிலை:
இந்தியாவில் கொரோன தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மதம் முதல் பரவி வந்தது. ஆரம்ப கட்டத்தில் மெல்ல தொற்று பதிவுகள் தொடங்கியது. ஏப்ரல் மாத இறுதியில் நாடு முழுவதும் 2ம் அலை மிகவும் தீவிர நிலையை அடைந்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அளித்துள்ள பேட்டியில் கொரோனா பாதிப்பு முடிவு நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இன்டர்நெட் -ஐ பயன்படுத்தும் பாதுகாப்பான வழிமுறைகள் – கூகுளின் புதிய வசதி!
இரண்டாவது அலைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளன. இந்திய மக்களுக்கு போடப்பட்டு வரும் தடுப்பூசிகளின் திறன் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப குழு திருப்தி அடையும் என்று நம்புகிறேன். செப்டம்பர் மத்தியில் அது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவிக்கப்படும். முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது தொற்று பாதிப்பு அதிகம் இருந்த இடங்களில், தற்போது அப்பகுதியில் பரவல் குறைந்துள்ளது.தடுப்பூசி குறைவாக போட்ட இடங்களில், வரும் நாட்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
அடுத்தாண்டின் இறுதிக்குள், இந்திய மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி கிடைத்துவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருக்கும். இதுவரை, கொரோனா தொற்றால் குழந்தைகள் மிகக் குறைந்தளவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில், கொரோனாவின் தீவிர அறிகுறி குறைவாகவே இருந்துள்ளது. இதற்கான தடுப்பு முறைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மூலம் இறந்து விகிதம் குறைந்துள்ளதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே, இந்த மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.