தமிழக அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!

0
தமிழக அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று - அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழக அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று - அச்சத்தில் பொதுமக்கள்!
தமிழக அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் பொதுமக்கள்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்லூரியில் பயிலும் மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று :

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் பரவிய உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று மூன்றாம் அலை கொரோனா பாதிப்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும் பெரும்பாலும் மக்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி கொண்டுள்ளதால் வைரஸின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் அரசு தடுப்பு பணியாக கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வார இறுதி, இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்தனர். இந்த நேரத்தில் கடந்த சில வாரமாகவே மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல செங்கல்பட்டில் 266 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,65,490 ஆக அதிகரித்துள்ளது. இது நான்காம் அலை கொரோனா பாதிப்புகள் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Cognizant நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு மத்தியில் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. அதனால் 200 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்ததால் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர். மேலும் ஒரு சில வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!