இந்தியாவில் ஒரே நாளில் 67,208 பேருக்கு கொரோனா தொற்று – 2,330 பேர் பலி!!
நாட்டில் தொடர்ந்து 10வது நாளாக கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக காணப்பட்டுள்ளது. இதை அடுத்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த இரண்டு வார காலமாக கொரோனா வைரஸ் தொற்று வீரியம் இழந்து வருகிறது. இதனால் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. அந்த வகையில் நாட்டில் தொடர்ந்து 10வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்திற்கு குறைவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
ஜூலை 1 வரை தளர்வுகளுடன் பகுதிநேர ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,97,00,313 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றால் 2,330 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,81,903 ஆக உள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் நாட்டில் தொற்றில் இருந்து 1,03,570 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,84,91,670 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோனா நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி தற்போது மருத்துவமனையில் 8,26,740 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 26,55,19,251 ஆக அதிகரித்துள்ளது.