இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 10,256 பேருக்கு தொற்று உறுதி!

0
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 10,256 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 10,256 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 10,256 பேருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறைந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 10,256 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,89,176 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு – ஆகஸ்ட் 29 முதல் துவக்கம்!

அதனை தொடர்ந்து புதிதாக 68 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,556 ஆக உயர்ந்தது. மேலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,23,944 ஆகவும் அதன் விகிதம் 98.61% ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 2,10,02,40,361 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,60,292 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்த வைரஸ் என்பதால் இதன் வீரியம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் பாதிப்பின் தீவிரத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!