பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
உலகம் முழுவதும் கடந்த 2010ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தாக்கம் பரவத்தொடங்கியது. கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவி வந்த நிலையில் நோய்த்தொற்று பரவும் விகிதத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
Reliance Jio 336 நாட்கள் வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் பிளான் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. கடந்த செப்.,1ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க திட்டமிடுபவரா நீங்கள்? இதோ அரிய வாய்ப்பு!
தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 8 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மாணவர்களுக்கு கொரோனா பரவும் விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.