தமிழகம் திரும்பிய வெளிநாட்டை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – அமைச்சர் தகவல்!
மத்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து தற்போது தமிழகம் திரும்பி இருக்கும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
கிட்டத்தட்ட 54 உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் உருமாறிய வைரஸாக வலம் வரும் இந்த கொரோனா தொற்று தற்போது ஒமிக்ரான் என்ற வீரியம் மிக்க தொற்று நோயாக உருவெடுத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொடர்பாக பல நாடுகளிலும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழி கற்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர்!
இந்தியாவிலும் இவ்வகை வைரஸ் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், வெளி நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகளுக்கு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்து தமிழகம் திரும்பிய 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும் போது, ‘இதுவரை ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9,012 பேரில் 11 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!
அதே போல ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வந்த இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள 13 பேரின் RT-PCR மாதிரிகள் மரபணு வரிசை ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் 10 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.