கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் CA தேர்வெழுதுவதில் விலக்கு – உச்ச நீதிமன்றம் ஆணை!

0
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் CA தேர்வெழுதுவதில் விலக்கு - உச்ச நீதிமன்றம் ஆணை!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் CA தேர்வெழுதுவதில் விலக்கு - உச்ச நீதிமன்றம் ஆணை!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் CA தேர்வெழுதுவதில் விலக்கு – உச்ச நீதிமன்றம் ஆணை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பலர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சி.ஏ. தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு வழங்கலாம் எனவும், அதனை அட்டெம்ப்ட் கணக்கில் கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.ஏ தேர்வுகள்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல மாநில அரசுகள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஜேஇஇ, நீட் போன்ற மத்திய அரசு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 3.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு!

இந்நிலையில் சி.ஏ தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதற்கு தயாராகி வரும் நிலையில் கொரோனா காரணமாக இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும், தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கவும், தேர்வு மையங்களை அதிகரிக்கவும் வேண்டும் என பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களது குடும்ப உறுப்பினர் பாதிக்கப்பட்டாலும், அதற்குரிய மருத்துவ சான்றிதழை அளித்து தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற உரிமையுண்டு. மேலும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களை, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு நடத்தப்படும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அதற்காக சி.ஏ. தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் கொரோனா பாதிப்பு மருத்துவ சான்றிதழை மட்டும் அளித்தால் போதுமானது. இதற்காக கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த காரணங்களால் தேர்வு எழுத முடியாதவர்கள், சி.ஏ. தேர்வு எழுதும்போது கொரோனா பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் தேர்வர்களுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், இதனை அடுத்த ஆண்டு அட்டெம்ப்ட் கணக்கில் கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!