தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் எதிரொலி – 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவு!!
தமிழகத்தில் கடந்த 1 மாதமாக அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு:
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு மூலம் கொரோனா பாதிப்பு விகிதமானது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்த அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக நோய்த்தொற்றானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு – பல்கலை அறிவிப்பு!!
இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட சரிபாதியாக குறைந்துள்ளது. தமிழக மருத்துவமனைகளில் 42 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும் 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தவிர 4 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு வீதம் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால் கொரோனா தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையளிக்க 14 முதல் 15 குப்பிகள் வரை மருந்துகள் தேவைப்படுகிறது. இதற்காக 35 ஆயிரம் மருந்து குப்பிகளை கூடுதலாக தர வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த வகையில் இதுவரை 3,060 மருந்து குப்பிகள்தான் கிடைத்துள்ளது. தவிர கொரோனா அச்சம் காரணமாக சென்னை மருத்துவமனையில், ஓரு பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவத்தை அடுத்து அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.