நாடு முழுவதும் 72 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் – மத்திய சுகாதாரத்துறை!
இந்தியாவில் 72 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு விகிதம் 10% பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் மின்னல் வேகத்தில் பரவி எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தனர். மேலும் 4000 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கையால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அதனால் மத்திய மாநில அரசுகள் முழு ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அரசுகள் தடை விதித்தது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சமூக சேவகர்களுக்கான விருது – ஜூலை 12 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகள் போடும் பணிகளின் விளைவாக பல மாநிலங்களில் தொற்று பரவல் குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 34 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வாரத்தை விட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 13 சதவீதம் குறைந்துள்ளது என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் சில பகுதிகளில் தொற்று பாதிப்பு இன்னும் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. இந்தியாவில் 71 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகின்றது. கொரோனா பரவல் 10 சதவீதத்திற்கு மேல் அல்லது 60 சதவீத படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதித்து பரவலை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.