23 கோடி இந்திய குடும்பங்களின் தினசரி வருமானம் பாதிப்பு – கொரோனா எதிரொலி!!
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தாக்கத்தின் முதல் அலையின் காரணமாக இந்தியாவில் உள்ள 23 கோடி குடும்பங்களின் வருவாயினை சாய்த்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பல முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளது.
கொரோனா தாக்கம்
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் கொரோனாவின் முதல் அலை தாக்கம் காரணமாக பல தரப்பு மக்களும் பாதிப்படைந்தனர். அது குறித்த ஒரு ஆய்வினை அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “ஸ்டேட் ஆஃப் வொர்க்கிங் இந்தியா 2021: கொரோனாவின் ஒரு ஆண்டு” என்ற அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 375 என்ற தொகையினை 23 கோடி இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி – ஆளுநர் பதவிப்பிரமாணம்!
இந்த ஊதிய அளவினை கொண்ட குடும்பங்கள் வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 22.64 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 7.24 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மார்ச் மாத ஆரம்பத்தில் கணக்கிடப்பட்ட ஆய்வு ஆகும். பின், இந்த எண்ணிக்கை தொற்று பரவல் ஆரம்பித்து எட்டு மாதங்களுக்கு பிறகு 6.52 கோடியாகவும் (61 சதவீதம் உயர்ந்து), நகர்ப்புறங்களில் 16.38 கோடியாகவும் (126 சதவீதம் உயர்ந்துள்ளது) அதிகரித்துள்ளது. மொத்தத்தில், இந்த எண்ணிக்கை 22.62 கோடியிலிருந்து 52.9 கோடியாக உயர்ந்தது, இது 77 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து இந்த அறிக்கையினை தயார் செய்த குழுவில் பேராசிரியர் ஒருவர் கூறியதாவது, “தன்னை ஏழைகள் என்று நினைக்காத பலர் உண்மையாகவே ஏழைகளாக மாறி விட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போது சுமார் 25 கோடி வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளது. கூடுதலாக, இந்த் ஆய்வில் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்த நிலையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்