இன்று முதல் கொரோனா முழு ஊரடங்கு தளர்வுகள் – பிரான்ஸ் அரசு அறிவிப்பு!
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு வீதம் குறைந்து வரும் சூழலில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி முதல்கட்டமாக உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை பொதுமக்கள் செயல்பாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகமானது படிப்படியாக குறைந்து வருவதாலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருவதாலும் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தளர்வுகளில் முதல் கட்டமாக உணவகங்கள், கஃபேக்கள் அனைத்தும் மே 19 முதல் மீண்டுமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!
அதன் படி மீண்டும் திறக்கப்பட்ட கலாச்சார அரங்குகளில் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் செயல்பாடு காணப்படுவதால் பிரான்ஸ் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நாடு முழுவதும் தற்போது இரவுநேர ஊரடங்கு உத்தரவானது, இரவு 11 மணிக்கு மேல் கடைபிடிக்கப்படும் என அறிவிப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தையும் திறக்க அனுமதியும், வீட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜிம்களை திறக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பிரான்ஸ் அரசாங்கம் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 28 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், குறைந்தது ஒரு டோஸ் அளவு தடுப்பூசிகளை எடுத்துள்ளனர். அதாவது 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 43%, வயது வந்தோரில் 55% பேரும் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர்.