கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிக்கையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க இருப்பதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
நிதி உதவி அறிவிப்பு:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தினால் நாட்டில் பல லட்சகணக்கான உயிர்கள் பலியாகியுள்ளது. இதில், அதிகமாக முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கும் சூழல் உள்ளதால், அவர்களுக்கு பல மாநில அரசுகளும் நிவாரண தொகை மற்றும் பல சிறப்பு திட்டங்களையும் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 518 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு – நாளை முதல் கொரோனா தடுப்பூசி பணிகள் துவக்கம்!
உத்தரபிரதேசத்தில் இந்தி மொழி பத்திரிகையாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தின் அனைத்து இந்தி மொழி பத்திரிகையாளர்களுக்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் தங்களின் உயிரை பணயம் வைத்து பாதிப்பு குறித்த செய்திகளை அளிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவளிப்பது தனது கடமை என்று தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாத உதவித்தொகை மற்றும் உயர்கல்விக்கான உதவிகள் போன்றவை அனைத்தும் செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.