ஏப்ரல் 19 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவலை தடுக்க அதிரடி அறிவிப்பு!
சமோவாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகள் காரணமாக தடுப்பு பணியாக ஏப்ரல் 19ம் தேதி வரை அதாவது மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பதவிகள் வாரியான விவரங்கள்!
இந்த தடுப்பூசிகள் மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸ் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவித்தது. இதனையடுத்து அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து அதனை செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது. இதனால் பாதிப்புகள் எண்ணிக்கைகள் சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினரின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் மக்கள் மீண்டும் இயல்பு நிலை வாழ்க்கை நோக்கி திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சில கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து சமோவாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டது. இருப்பினும் பாதிப்புகள் குறையாத நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் 19ம் தேதி வரை மேலும் ஊரடங்கை நீட்டிக்க அந்நாட்டு பிரதமர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.