தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமலாகுமா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஊரடங்கு அமலாகுமா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஊரடங்கு அமலாகுமா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஊரடங்கு அமலாகுமா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் கடந்த 2021,2022ம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதனை மக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2021 ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற இரு கொரோனா தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு 2 டோஸ் செலுத்தப்பட்டு வந்தது. இந்த தடுப்பூசி பயன்பட்டால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது காண முடிந்தது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – அலைமோதும் கூட்டம்! பொதுமக்கள் அவதி!

அதனால் அரசு இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது. மேலும் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதனால் தமிழகம் மூன்றாம் அலையான ஓமிக்ரான் தாக்குதலில் இருந்து தப்பித்தது. நாம் கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என்று நினைத்து கொண்டிருக்கையில் தற்போது மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்தும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Exams Daily Mobile App Download

அதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. மேலும் பொது மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தொற்று பரவுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இணை நோய்கள் உள்ளவர்களும் முதியவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். மேலும் தொற்று நடவடிக்கை தீவிரமாக இல்லாவிட்டால், தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!