ஆகஸ்ட் 14 முதல் வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் – உத்தரபிரதேச அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் வார இறுதி ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பிற்கும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்பிற்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் செய்தி தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம், மாநிலத்தில் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 59 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட புதிய நோய்த்தொற்று கூட பதிவாகவில்லை எனவும், மீதமுள்ள 16 மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே தொற்று பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஷாக் நியூஸ்! 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 40 ஆயிரம் பேருக்கு கொரோனா!
மாநிலத்தில் உள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆதித்யநாத் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன்பின்னர், செய்தியாளர்களிடம் மாநிலத்தில் கோவிட் -19 தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால் வார இறுதி நாட்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும் என்று இன்று உத்தரவிட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக ஜூலை மாதத்தில், அரசு திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே சந்தைகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்திருந்தது. சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் சானிடைசியரைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகளை உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் கே அவஸ்தி அறிவித்துள்ளார்.