தமிழகத்தில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா தொற்று – நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்!
தமிழகத்தில் சென்னை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிவருகிறது. அதனால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க கோரி மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.
மீண்டும் கொரோனா தீவிரம்:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைகள், ஹோட்டல்கள், திரையரங்குகள், பேருந்துகள் என அனைத்து விதமான பொது இடங்களிலும் மக்களுக்கு100% தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் உரிய கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ‘ஓமைக்ரான்’ காரணமாக டிச.15 வரை விடுமுறை!
அதாவது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அனைத்தையும் முறையே கடைபிடிக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும் கொரோனா தொற்று இன்னும் முற்றிலும் நம்மை விட்டு அகலவில்லை என்பது தான் உண்மை.
144 தடை உத்தரவு அமல், பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!
அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதாவது சென்னை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா அதிகரித்து வரும் மாவட்டங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.