சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் 24 இடங்களில் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
பொதுமக்கள் அதிக கூடும் 24 இடங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கை:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மாவட்டங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்தை பொறுத்து கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நாகை, ஈரோடு, போன்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
நரிக்குறவர் இன மக்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி முதல் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதவாது, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய கடைகள், மருந்தகம், உணவகம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்று நிர்வாகம் பட்டியலையும் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு, நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் போன்ற 24 இடங்கள் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.