நாடு முழுவதும் செப். 6 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – அதிபர் அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு முழுவதும் செப்டம்பர் 6 வரை பொதுமுடக்கத்தை நீட்டிப்பதாக அந்நாட்டின் அதிபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 தொற்று, கடந்த ஆண்டு முதல் பரவி பல மக்களின் உயிரை காவு வாங்கியது. இதை தடுக்க எல்லா இடங்களிலும் தொற்றின் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இதனை அடுத்து கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளின் பயன்பட்டால் ஓரளவு தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து “டெல்டா மற்றும் டெல்டா பிளஸ்” என நாடுகளிடையே உள்ள மக்களிடம் பரவி பீதியை ஏற்படுத்தி வந்தது.
வார இறுதி ஞாயிறு முழு ஊரடங்கு மீண்டும் அமல் – மாநில அரசு உத்தரவு!
இதனை அடுத்து மீண்டும் முழு பொது முடக்கத்தை நாடுகள் அமல்படுத்தி வந்தன. மேலும், தடுப்பூசிகள் செலுத்துவதையும் அதிகப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் 30 வரை நாடு தழுவிய பொது முடக்கத்தை அந்நாட்டின் அதிபர் அமல்படுத்தினார். இதனை அடுத்தும் தொற்று பரவல் என்பது தற்போது வரை கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து முக்கிய அறிவிப்பு ஒன்றை அதிபர் வெளியிட்டார்.
TN Job “FB Group” Join Now
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பொது முடக்கத்தை செப்டம்பர் 6 வரை நீட்டிப்பதாகவும், மக்கள் வைரஸ் பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் உத்தரவிட்டார். நாட்டில் இதுவரை 4,597 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 209 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,12,370 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆகவும் பதிவாகியிருப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார்.