அக்.1 முதல் நாடு தழுவிய ஊரடங்கு நீக்கம்? வெளியான தகவல்!
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கொரோனா 3ம் அலை தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய முழு முடக்கத்தை வரும் அக்டோபர் 1 ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா 3ம் அலை தொற்று தீவிரமடைந்து வந்ததால் அந்நாட்டில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் கடந்த ஏப்ரல் மாத இடையில் பேரலையாக உருவான கொரோனா மூன்றாவது அலை காரணமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.
தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று சூழல் மாறி இருப்பதால் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை மேம்பட்டு வருவதால் ஊரடங்கு உத்தரவை நீக்க சரியான நேரம் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் நேற்று (செப்.28) தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 27ம் தேதியன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள 100% பணியாளர்களும் அக்டோபர் 1 முதல் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
இந்தியாவில் 7 முதல் 11 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!
மேலும் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே அலுவலகம் வரும்படிக்கு அரசு தெரிவித்தது. இப்போது பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் சுகாதாரத் துறை வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் தொடங்கும் என இலங்கை அரசின் பணிக்குழுவின் தலைவரும் ராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.