டிச.12 முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு விளக்கம்!
மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த நவம்பர் மாதம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு தொடரும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு:
சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் விரைவாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியாக கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவத்துறை இறங்கியது. கடின உழைப்பின் பலனாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
RRB குரூப் D 2019 தேர்வு பிப்.23 முதல் தொடக்கம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் மேற்கு ஐரோப்பா நாடான ஆஸ்திரியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதி முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
Post Office இல் குழந்தைகளுக்காக சேமிக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு – அருமையான திட்டம்!
இந்த ஊரடங்கானது டிசம்பர் 11 ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என ஆஸ்திரியா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆஸ்திரியாவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தால் கொரோனா பரவல் குறைந்து வருவதாகவும், தடுப்பூசி செலுத்தியோரது எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.