இன்று முதல் பூங்காக்கள் மூடல், பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி – ஆட்சியர் உத்தரவு!

0
இன்று முதல் பூங்காக்கள் மூடல், பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி - ஆட்சியர் உத்தரவு!
இன்று முதல் பூங்காக்கள் மூடல், பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி - ஆட்சியர் உத்தரவு!
இன்று முதல் பூங்காக்கள் மூடல், பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி – ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூங்காக்களை மூட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து பேருந்துகளிலும் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணி:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு தடுப்பூசி மையங்கள் அமைத்து அனைத்து பகுதிகளிலும் இலவசமாக மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. மற்றொரு புறம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!

இதன் விளைவாக கடந்த மாதத்தில் தொற்று பரவல் எதிர்பார்த்த அளவு குறைந்தது. எனவே அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி முழு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து தொழில்களை தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த ஜூன் 14 முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது முழு தளர்வுகளை எட்டும் நிலையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய இடங்களில் செயல்படும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோட்டை பூங்கா, அமிர்தி வன உயிரியல் பூங்கா மேலும் அனைத்து பூங்காக்களையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து பேருந்துகளிலும் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!