தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சர் மா.சு விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தினை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதன் எதிரொலியாக இனி வரும் நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் அரசு சார்பில் இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பரவல் சதவீதம் குறைந்து வந்தது. இந்த கொரோனா பரவலின் போது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மற்றும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கிய பணிகளை அரசு துறை அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சிறப்பாக செய்து வந்தனர். கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்ததால், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வந்தது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் பணியிட மாற்றம் – புதிய அதிகாரி நியமனம்!
இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் பழையபடி புதிய அறிவுறுத்தல்கள் மற்றும் புதிய வழிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வேக்சின் பணிகள் மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசினார்.
Exams Daily Mobile App Download
அப்போது, தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவது அச்சத்தினை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது என்றும், 98 லட்சம் வேக்சின் குப்பிகள் கையிருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைவாகவே உள்ளதால் தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.