நாடு முழுவதும் மார்ச் 31 வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் தற்போது அமலில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்துதல் போன்றவைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வந்தது.
மார்ச் 1 முதல் 6-12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாவட்ட நிர்வாகம் அனுமதி!
அதனை தொடர்ந்து பேருந்துகள் ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும். அதே போல திரையரங்கு, உணவகம், போன்ற பொது இடங்களில் 505 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. அரசின் இந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலையிழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் ஊரடங்குகளும், கட்டுப்பாடுகளும் அவசிய ஒன்றாக இருந்து வந்தது. பாதிப்பு எண்ணிக்கைகள் குறையும் போது அரசு பொது மக்களின் நலன் கருதி அவ்வப்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை – இன்று மாலை அறிவிப்பு!
ஏனெனில் முழுமையாக கொரோனா பரவல் குறையவில்லை. அந்த வகையில் தற்போது அமலில் உள்ள கொரோனா கட்டுபாடுகளை மத்திய அரசு மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதனால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கபடுகிறது.