ஆகஸ்ட் 31 வரை கட்டுப்பாட்டு நடவடிக்கை நீட்டிப்பு – சண்டிகர் அரசு உத்தரவு!
சண்டிகர் மாநிலத்தில் அரசு முன்னதாக அறிவித்துள்ள அனைத்து கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீட்டிப்பு:
சண்டிகரில் கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ஜூலை 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக அரசு அறிவித்தது.
ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதன்படி, பள்ளிகள் மாணவர்களுக்கு காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், ஊழியர்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சண்டிகர் அரசு மாநிலத்தில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பதாக அரசு நேற்று அறிவித்துள்ளது. மேலும், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் ஜூலை 19 முதல் பயிற்சி நிறுவனங்களை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது.
வழிமுறைகள்:
- 2021 ஜூலை 19 முதல் பள்ளிக்கு வரும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிக்கப்டுகின்றனர்.
- கல்வி நிறுவனங்களில் கோவிட் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- திருமணங்கள் போன்ற சமூகக் கூட்டங்களில் 50% மக்கள், குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி அல்லது, 72 மணி நேரத்திற்கு உட்பட்ட கொரோனா சோதனை சான்றிதழுடன் அனுமதிக்கப்படுவார்கள்.
- ராக் கார்டன் மற்றும் அருங்காட்சியகங்கள் கோவிட் நெறிமுறையுடன் மீண்டும் திறக்கப்படும்.
- சினிமா அரங்குகள் மற்றும் ஸ்பாக்களும் 50% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுளள்து.