சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – இன்று முதல் புதிய நடைமுறை!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இரவு 10 மணி வரை இயக்கப்படும் எனவும் அரசு விடுமுறை நாட்களில் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில்வே அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்கள் நேரம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. குறிப்பிட்ட சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பெரும்பாலும் அரசு பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்காக மட்டுமே பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவும் அச்சத்தால் மக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். போதிய அளவு பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் பருவ மழை காரணமாகவும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 37,154 பேருக்கு கொரோனா – 724 பேர் உயிரிழப்பு!
இதனால் ரயில்வே துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற ரயில்களை தொடர்ந்து சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஜூன் 14 முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில்களும் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி 50 % பயணிகளுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ரயில்கள் வழக்கம் போல் இயங்கியது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து தற்போது சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் மெட்ரோ ரயில்கள் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.