தமிழகத்தில் இன்று முதல் 691 சாதாரண பேருந்துகள் இயக்கம் – ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து அதிகபட்சம் 50% பயணிகளுடன் தொடங்கியுள்ளது.
பேருந்து போக்குவரத்து:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து பொதுப்போக்குவரத்துகளும் தடை செய்யப்பபட்டது. மக்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் இ- பதிவு செய்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், இன்று முதல் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 50% பயணிகளுடன் பேருந்துகள் இன்று இயக்க தொடங்கியுள்ளது.
CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பீடுகள் – விசாரணை நாளை ஒத்திவைப்பு!
மொத்தம் 1,746 பேருந்துகள் காலை 6 மணி முதல் 9:30 மணி வரை இன்று செயல்பட இருக்கின்றது. மாநகர பேருந்து போக்குவரத்து கழகத்தின் 1,400 பேருந்துகளில், 691 சாதாரண பேருந்துகள், 620 டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் 89 விரைவு பேருந்துகள் செயல்பாட்டில் உள்ளது. சாதார கட்டண பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் போன்றவர்கள் இலவச பயணிக்க அனுமதிக்கப்டுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுடன் வரும் உதவியாளர் ஒருவரும் இலவசமாக பயணிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் 346 பேருந்துகளும் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கு இடையில் மட்டும் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. முகக்கவசம் அணிந்துள்ள பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.