தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர் ‘இது’ கட்டாயம் – அரசுக்கு வலியுறுத்தல்!
கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில் எந்த வித அறிவிப்புமின்றி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. எந்த ஒரு முன்அறிவிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதானால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களை போலவே வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன்பாக வணிகர் சங்கங்களை கலந்தாலோசிக்க வேண்டும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுக்கு வலியுறுத்தல்
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என உருமாறி பரவி வந்தது, இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதனால் பொதுமக்களுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.மீண்டும் இது போன்று வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன்பாக வணிகர் சங்கங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் வேலைவாய்ப்பு – நேர்காணல் அறிவிப்பு!
கடலூரில் வியாபாரிகளுக்கிடையே விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கு பெற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தை மூன்று மண்டலங்களாக பிரித்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவை மற்றும் சென்னையில் கூடுதலான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. வியாபாரிகளை திடிரென்று கடைகளை அடிக்க சொல்வதும், ஒரே கடையில் காய்கறி, மளிகை, பால் விற்பனைக்கு கோவையில் தனித்தனி நேரம் ஒதுக்குவதும் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு குளறுபடிகளையும் ஏற்படுத்துகிறது.
TN Job “FB
Group” Join Now
இது போன்று எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடைகளை அடைக்க சொல்வதை தவிர்த்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் முன் வணிகர்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதுடன் தடுப்பூசி செலுத்தி கொள்வது முக்கியம் எனவும் மக்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.