தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் முழு ஊரடங்கு அமல்?
கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 3ம் அலை குறித்த பதட்டம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் அதற்கான விளக்கத்தை காணலாம்.
கொரோனா 3ம் அலை:
கொரோனா தொற்று முதல் அலையை கடந்து இரண்டாம் அலை பரவல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர், முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மாநில வாரியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மே 10 முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தது.
தமிழக அரசு கல்லூரி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கல் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்!
இதன் காரணமாக தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் கோவில்கள், திருவிழாக்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு தடை விதிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தற்சமயம் 20 மாவட்டங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இது குறித்த முடிவுகளை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிகாரம் வழங்கியுள்ளார். இதை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலம் முழுவதும் ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை என்றும், 3ம் அலையை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.