தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. அதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் தொற்று தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு நேற்று ஓமைக்ரான் உறுதியாகி உள்ளது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் பரவலை தடுக்க இன்று முதல் டிச.31 வரை 144 தடை உத்தரவு – அரசு அறிவிப்பு!

மேலும் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் புதிய கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மக்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவத்துறை முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்றை தடுக்க தீவிர கட்டுப்பாடுகள் – முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை!

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 1,11,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 40,000 ஆக்சிஜன் படுக்கைகள், 8,000 ஐசியூ படுக்கைகள் தயாராகவுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஒமைக்ரான் பரவி வருவதை அடுத்து மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், இதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் அரசின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!