செப்.21 வரை நாடு தழுவிய முழு முடக்கம் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
இலங்கை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனாவின் 4 ஆம் அலையை எதிர்கொண்டு வரும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தற்போது நாடு தழுவிய முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கானது வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் எனவும் அதற்கு பின்னாக ஊரடங்கு தளர்த்தப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கொரோனா பணிக்குழுவை சந்தித்து பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்க்ஷே செப்டம்பர் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
Jio நிறுவனத்தில் ரூ.100க்கு கீழ் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் நிறுத்தம் – பயனர்கள் அதிர்ச்சி!
இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று (செப்டம்பர் 10) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே அந்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கையில் ஊரடங்கு தளர்வுகளை அளிக்க முடியும் என்று அதிகாரிகள் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும், பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசங்களை அணிவது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதற்கிடையில், செப்டம்பர் 21 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டால் என்ன வகையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிபர் ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்புக்கு முன்னதாக செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் இலங்கையில் முழு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட இருந்தது. ஆனால் சுகாதார நிபுணர்களின் பரிந்துரையை தொடர்ந்து இக்கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.