முழு ஊரடங்கு இல்லை, ஆனால் கடும் கட்டுப்பாடுகள் – மாநில அரசு தகவல்!!
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது மேலும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை, ஆனால் நோய் பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்:
கொரோனா இரண்டாம் அலை நாடுமுழுவதும் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் உயர்ந்து வருகிறது. மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. மற்ற நாடுகளை விட தற்போது இந்தியாவில் அதிக பாதிப்பு நிலவுகிறது. மக்கள் தொற்று பரவல் அதிகரிப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மருந்து பொருட்களுக்கும் சுவாச கருவிகளுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த கொரோனா பரவல் அதிகரிப்பால் தற்போது பஞ்சாப் மாநில அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.அம்மாநிலத்தில்புதிதாக 7,327 பேர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் மேலும் 157 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுளள்னர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஜிசன் மற்றும் படுக்கை வசதிகளை கண்காணிக்க உரிய துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தற்காலிக மருத்துவ மனைகளை உருவாக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுவதாக தலைமை செயலர் கூறினார்.
14 நாட்களுக்கு பகுதிநேர ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!!
மேலும் 3,29,830 டோஸ் கோவிட் -19 தடுப்பூசி மாநிலத்திற்கு வர உள்ளதாகவும் விரைவில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளிலும் 2000 படுக்கைகள் தயார் செய்யபப்டும். எனவும் அம்மாநில முதல்வர் தெரிவித்தார். மாநிலத்திற்கு வெளியே இருந்து வரும் நோயாளிகளுக்கும் சமமாக சிகிக்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தற்போது முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை ஆனால் நோய் பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்