4 மாவட்டங்களில் மே 6ம் தேதி வரை முழு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் தற்போது அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 6 ஆம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக அரசு சார்பில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் உச்சம் அடைந்து வருவதால் அங்கு உள்ள 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 3.57 லட்சம் பேருக்கு தொற்று!!
புதிதாக, 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் அந்த மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், ஜம்மு, பரமுல்லா மற்றும் புத்காம் ஆகிய 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்தது. இப்படியாக இருக்க, மீண்டும் இந்த பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மாவட்டத்தை அந்த மாநில அரசு “ரெட் அலெர்ட்” மாவட்டமாக அறிவித்துள்ளது.
இந்த முழு பொதுமுடக்க உத்தரவு வரும் மே மாதம் 6 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில அரசின் சார்பில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அதே போல் பொது இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்