நவ.8 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் – கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு!
அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தற்போது பயண கட்டுப்பாடுகள் வருகிற 8ம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் பல வளர்ந்த நாடுகளும் அடங்கும். அதனால் அந்த நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக சர்வதேச விமான சேவைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வரிசையில், அமெரிக்கா அரசு கடந்த ஆண்டு முதல் பயண கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. தற்போது கொரோனா பரவல் குறைவதால் வருகிற 8 ஆம் தேதி முதல் அதை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
CBSE மாணவர்கள் கவனத்திற்கு – நவ.16 முதல் பருவத்தேர்வு! முழு விபரங்கள் இதோ!
விமான சேவை பயணங்களில் பல தளர்வுகள் வழங்கப்பட்டாலும், கொரோனா பரிசோதனை கண்டிப்பாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற நாட்டினர் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தாத அமெரிக்கர்கள், நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் தடுப்பூசியின் ஒரு ‘டோஸ்’ செலுத்தியுள்ளோர் விமானம் ஏறுவதற்கு முதல் நாள் பரிசோதனை செய்து, பாதிப்பில்லா சான்று வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்களும் பயணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பு இல்லை என உறுதி செய்ய வேண்டும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு – நவம்பர் 30க்கு பின் நீட்டிப்பு கிடையாது!
கொரோனா தடுப்பூசி செலுத்தாத 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்வது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் பயணிக்கும் நபர் தடுப்பூசி செலுத்தியவராக இருந்தால் மூன்று நாட்களுக்கு முன்னும், தடுப்பூசி செலுத்தாதவர் எனில் முதல் நாளும் பரிசோதனை செய்து பாதிப்பில்லா சான்று வழங்க வேண்டும். உலக சுகாதார மையத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்தியோரை மட்டுமே விமான நிறுவனங்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.