ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டாயம் – முதல்வர் அறிவிப்பு!
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையாக முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அம்மாநிலத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும் நோய் பரவல் குறையவில்லை, பதிலாக பாதிப்புகள் மென்மேலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கேரளா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேலும் தடுப்பு பணியாக பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளது. கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் – இந்தியா முதலிடம்!!
நடப்பு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. மேலும் மொகரம் மற்றும் ஓணம் பண்டிகைகளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் விளைவாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 24,296 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரள அரசு நோய் தடுப்பு பணிகளை மீண்டும் விரைவுபடுத்த தொடங்கியுள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார். பொது மக்களையும், அவர்களின் உயிரையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதனால் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.