புதுச்சேரியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – ஆளுநர் தகவல்!!
புதுச்சேரியில் தற்போது நடைமுறையில் இருக்கும், இரவுநேர ஊரடங்குடன், வார இறுதி பொது முடக்க கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவுநேர ஊரடங்கு
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தவிர பலி எண்ணிக்கையும் சற்று உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெருகி வரும் நோய் பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் பலத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மத்திய அரசில் ஆண்களுக்கான வேலை – 627 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!
அதனடிப்படையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், மால்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தவிர, பொது போக்குவரத்து, அலுவலகங்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு ஆகியவற்றை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.