ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – இன்று முதல் அமல்!
கோவா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவானது இன்றுடன் (ஆகஸ்ட் 2) முடிவடையும் நிலையில், இக்கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில மாநிலங்களில் தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது கோவா மாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 6 வரை ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
ஊரடங்கு தொடர்பான இந்த முடிவை தெற்கு கோவா மாவட்ட நிர்வாகம் நேற்று (ஆகஸ்ட் 1) அறிவித்தது. இது குறித்த அறிவிப்பில், ‘கோவா மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவானது ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இந்த கட்டுப்பாடுகளை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வேறு எவ்வித தளர்வுகளும் கொடுக்கப்படவில்லை’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக கோவாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கவும், உடற்பயிற்சி கூடங்கள் 50% திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன. கூடுதலாக, சலூன்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகங்கள், அரங்கங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டன. மேலும் மத வழிபாட்டு தலங்கள் 15க்கும் மேற்பட்ட பொது மக்களின் வருகையுடன் மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோவாவின் கடலோர மாநிலத்தில், நேற்று (ஆகஸ்ட் 1) ஒரு நாளில் 59 புதிய பாதிப்புகள் மற்றும் ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.