ஆகஸ்ட் 30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – இரவு ஊரடங்கு நேரம் குறைப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு ஆகஸ்ட் 30ம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடிப்பதாக அறிவித்து உள்ளது. மேலும் ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கின் நேரமும் குறிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அப்டேட்:
இந்தியாவில் தினசரி 4 லட்சம் வரை தினசரி கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை குறைக்க மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது 40 ஆயிரத்திற்கும் கீழ் தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. மறுபுறம் கொரோனா தடுப்பூசிகளும் விரைவாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் உயிரிழப்புகள் எண்ணிக்கையும் சரிந்துள்ளதால் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் கொரோனா 3வது அலை அச்சத்தினால் சில கட்டுப்பாடுகள் மட்டும் தொடர்ந்து அமலில் உள்ளன.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – செர்ட்இன் வெளியீடு!
இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு ஆகஸ்ட் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் அரசின் உத்தரவின்படி, மக்கள் நடமாட்டம் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரவு ஊரடங்கு காலத்தில் அவசர சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிராமப்புறங்களில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் போது மட்டுமே உள்ளூர் ரயில்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்று கூறி இருந்தார். இதனால் தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.