தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்!
தமிழக அரசு ஜூலை 19ம் தேதியான இன்று முதல் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீடித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக தீவிர வழிகாட்டுதல் விதிமுறைகளை அரசு விதித்தது. அனைத்து கல்வி நிறுவனங்கள் உட்பட பலவற்றிற்கும் அரசு தடை விதித்தது. பொது போக்குவரத்திற்கும் அரசு உத்தரவு விதித்தது. தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் கொரோனா பரவல் தீவிரம் சில வாரங்களாக கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் புதிதாக 499 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல் !!
இதனால் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த வாரும் ஜூலை 19ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும், சில தளர்வுகளை அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த சமயங்களில் பள்ளிகள் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு பணிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் நேரடி வகுப்புகள் ஏதும் தொடங்கப்படவில்லை. மாநிலத்தில் தொடர்ந்து திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், சமுதாய மற்றும் அரசியல் கூட்டங்கள் ,பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ,பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கான தடை வரும் 31-ஆம் தேதி வரை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று இறுதி சடங்கில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.