ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா தொற்றின் தீவிர தாக்கத்தினை தொடர்ந்து அதனை குறைக்கவும், பாதிப்பு விகிதத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக நோய் தொற்று பரவும் விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இருப்பினும் நோய் பரவல் முழுமையாக முடியும் வரை பாதுகாப்பு கருதி தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேருக்கு கொரோனா – 417 பேர் உயிரிழப்பு!
பல்வேறு மாநிலங்களின் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தளர்வுகளுடன் ஊரடங்கில் உள்ள கட்டுப்பாடுகளும் மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனபடி ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நேற்று ஒரு நாளில் மட்டும் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,22,282 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1,19,548 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து உள்ளனர். 728 பேர் சிகிச்சையிலும் 1,805 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இதனால் அரசு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 10 மணி வரை திறக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.