ஏழு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு மேலும் 4 நாட்கள் நீடிப்பதாக அறிவித்துள்ளது. இக்கட்டுப்பாடுகள் 7 மாவட்டங்களில் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மாநிலங்கள் தோறும் உள்ள கொரோனா புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மாநிலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு – மத்திய அரசு!
அதாவது மாநிலம் முழுவதும் உள்ள கொரோனா தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர் 7 மாவட்டங்களில் மட்டும் மேலும் 4 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று (ஆகஸ்ட் 4) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே முழு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ள மற்ற 9 மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள உத்தரவில், மணிப்பூரின் மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தோபால், கச்சிங், பிஷ்ணுபூர், சாண்டல் மற்றும் சுராசந்த்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கொரோனா நேர்மறை விகிதம் இன்னும் அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் இரவு ஊரடங்கு தொடரும்’ என தலைமைச் செயலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.