ஆகஸ்ட் 14 & 15 இரு நாட்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் (14.08.2021) (15.08.2021) ஆகிய இரு தினங்களிலும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதியை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கடைகள் அடைப்பு :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது பொது மக்களிடையே அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. ஏற்கனவே மூன்றாம் அலை கொரோனா வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு பணியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 15க்கு பிறகு முடிவு – அமைச்சர் தகவல்!
அதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9-ந் தேதி முதல் பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் மாலை 5 மணியுடன் அடைக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் (14.08.2021) (15.08.2021) ஆகிய இரு தினங்களிலும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த கட்டுப்பாடுகள் 2 வாரங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 23ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும். இந்த கட்டுப்பாடுகளை மீறி அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்படுவது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட கடைகளில் கொரோனா தடுப்பு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.