மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பீகார் மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதால் தற்போதுள்ள பொது முடக்கத்தை மேலும் மே 15 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 11,407 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர 82 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 5.09 லட்சம் பாதிப்பு, பலி எண்ணிக்கை 2,800 ஆகவும் அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் 1,686 போலீசார் பாதிப்பு – 60 பேர் உயிரிழப்பு!!
இதனால் பீகாரில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து பீகாரில் மே மாதம் 15 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். பீகார் மாநில அமைச்சர்களுடன் முதல்வர் நேற்று (மே 3) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அம்மாநிலத்தில் மார்ச் 15ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மே 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு கட்டாயம் என ராகுல் காந்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்